முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் நூதன முறையில் திருட்டு

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பில்லுமேடு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி செல்வராணி (36). இவர் இன்று கிள்ளையில் உள்ள இந்தியன்வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் பணத்தை

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:19 PM
பகிர்:

சிதம்பரம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் திருட்டு போனது.

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பில்லுமேடு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி செல்வராணி (36). இவர் இன்று கிள்ளையில் உள்ள இந்தியன்வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் பணத்தை பெற்று பையில் வைத்துக் கொண்டு கிள்ளை கடைவீதிக்கு வந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் ரூ.10 நோட்டை கீழே போட்டுள்ளார். செல்வராணி நோட்டை குணிந்து எடுக்க முயன்ற போது அவரது பணப்பையை மர்ம நபர் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →