முகப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

பழனியில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:20 PM
பகிர்:

பழனியில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பழனி ரெங்கநாதன் தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் ரகமத்துல்லா(31).  இவர் வியாழக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு திரும்ப வரும் போது ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தயத்தை அடுத்த தும்மிச்சிபாளையம் கருப்பணசாமி தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி(23) என்பவர் அதை திருடி எடுத்து செல்ல முயன்றுள்ளார்.  இதைப் பார்த்த ரகமத்துல்லா பெரியசாமியை கையும், களவுமாக பிடித்து பழனி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.