முகப்பு
தற்போதைய செய்திகள்

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: கடலூர் மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இலங்கையிலிருந்து படகு மூலம் தீவிரவாதிகள் தமிழகத்தில் கடல்வழியாக ஊடுருவி சதிச்செயலலில் ஈடுபட உள்ளதாக உளவுத்துறையினர் 2வது முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து தமிழக

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:27 PM
பகிர்:

தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து படகு மூலம் தீவிரவாதிகள் தமிழகத்தில் கடல்வழியாக ஊடுருவி சதிச்செயலலில் ஈடுபட உள்ளதாக உளவுத்துறையினர் 2வது முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து தமிழக முழுவதும் கடலோர காவல் படையினர், கியு பிரிவு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பெரியகுப்பம், தா.சோ.பேட்டை, சாமியார்பேட்டை, முடசல்ஓடை, கிள்ளை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இரவு, பகலாக கடலோர காவல்படையினர் மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் படகு மூலம், கடற்கரையோரமும் கடலோர காவல் படையினரும், போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர கிராமத்திற்கு படகு மூலம் யாராவது புதிய நபர்கள் வந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடையாள அட்டையை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும் என போலீஸார் பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →