தற்போதைய செய்திகள்

தனியார் பள்ளியில் ரூ.15 ஆயிரம் திருட்டு

விருதுநகர் அருகே அம்மாபட்டி கிராமத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் செயலாளராக இருந்து வருபவர் ஜான் மார்ட்டின்(45). இவர், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ரூ.15

எஸ். பாண்டியன்

விருதுநகர் தனியார் உயர் நிலைப்பள்ளியின் அறையை உடைத்து  ரூ.15 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே அம்மாபட்டி கிராமத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் செயலாளராக இருந்து வருபவர் ஜான் மார்ட்டின்(45). இவர், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை அறையில் பீரோவில் வைத்து விட்டுச் சென்றாராம். இதையடுத்து வழக்கம் போல் திங்கள்கிழமை காலையில் பள்ளிக்கு வந்து பார்த்தாராம்.

அப்போது, அறையின் கொண்டியை நெம்பியும், அறையிலிருந்த பீரோவை கடப்பாறை கம்பியால் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதோடு, உள்ளே சென்று பார்க்கையில் பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக பள்ளியின் செயலாளர் ஜான்மார்ட்டின் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT