முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில அரசு வழங்குவதைப் போன்று மத்திய அரசும் வழக்குரைஞர்களுக்கு சேமநல நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு அவரவர் பணி தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்  தொகை வழங்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவைச் சேர்ந்த இளம் வழக்குரைஞர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உதவித் தொகை வழங்குவதுடன்,  வழக்குரைஞர் அலுவலகம் அமைக்கவும் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.