மின்சாரம் தாக்கி இருவர் பலி
சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மின்சார கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மின்சார கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விவசாய தொழிலாளியான மாரிமுத்து(53) நேற்றிரவு வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சார கம்பி அருந்து விழுந்திருப்பதை கவனிக்காமல், அதை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி மாரிமுத்து சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்.
தந்தை தோட்டத்தில் விழுந்து கிடந்ததை கண்ட, அவரின் மகள் சாந்தி அவரை தொட்டதால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement