மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் பலி
பழனி மேற்கு இந்திராநகர் கருப்புச்சாமி தோட்டத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(58). இவர் வியாழக்கிழமை பழனி-பழைய தாராபுரம் சாலையில் சாமிதியேட்டர் நோக்கி வந்து கொண்டிருந்த போது பின்னே வந்த
பழனியில் மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் பலியானார்.
பழனி மேற்கு இந்திராநகர் கருப்புச்சாமி தோட்டத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(58). இவர் வியாழக்கிழமை பழனி-பழைய தாராபுரம் சாலையில் சாமிதியேட்டர் நோக்கி வந்து கொண்டிருந்த போது பின்னே வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.எனினும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி தேவகி(48) கொடுத்த புகாரின் பேரில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த சின்னக்கலையமுத்தூர் 4வது வார்டை சேர்ந்த அங்குராஜ் மகன் குமார்(22) மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.