முகப்பு
தற்போதைய செய்திகள்

போதிய விளைச்சல் இல்லாததை கண்டு நிலத்தில் விவசாயி மயங்கி விழுந்து மரணம்

சிதம்பரத்தை அடுத்த மேலவன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாசிலாமணி (60). இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளார். நீரில்லாததால் விளைச்சல் குறைவாக இருந்தது. விவசாயி மாசிலாமணி விளைந்த நெல்லை அறுவடை செய்ய ஆட்களுடன் வயலுக்கு சென்றுள்ளார். அறுவடை கூலிக்கு கூட நெற்பயிர் போதிய விலைக்கு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:16 AM
பகிர்:

சிதம்பரம் அருகே நீரின்றி போதிய விளைச்சல் இல்லாததை கண்டு நிலத்தில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

சிதம்பரத்தை அடுத்த மேலவன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாசிலாமணி (60). இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளார். நீரில்லாததால் விளைச்சல் குறைவாக இருந்தது. விவசாயி மாசிலாமணி விளைந்த நெல்லை அறுவடை செய்ய ஆட்களுடன் வயலுக்கு சென்றுள்ளார். அறுவடை கூலிக்கு கூட நெற்பயிர் போதிய விலைக்கு விற்பனையாகது என வேதனையுற்ற அவர் திடீரென நெஞ்சுவலி வந்து வயலில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அறுவடை செய்ய வந்த கூலித் தொழிலாளர்கள் அவரை வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்னர் பார்த்த போது விவசாயி மாசிலாமணி இறந்து போனது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →