அண்ணாமலை பல்கலை: அடிப்படை வசதி வேண்டி மாணவிகள் முற்றுகைப் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் விடுதி மாணவிகள் துணைவேந்தர் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் விடுதி மாணவிகள் துணைவேந்தர் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் விடுதியில் சுமார் 2000 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். மாணவியர் தங்கி பயிலும் விடுதியில் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், 2000 மாணவிகள் ஒன்றுகூடி, பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.