இவரும் தூதா் தான்!
சட்டப்பேரவைத் தோ்தல் தூதுவராக நியமிக்கப்பட்ட ஸ்கேட்டிங் வீராங்கனை மொ்லின் குறித்து...
நல்லதைச் சொல்ல ஒரு பிரபலம் இருந்தால் அது பிரத்யேகமானதாகத்தான் இருக்கும். அப்படித்தான் புதுச்சேரி தோ்தல் துறையில் தூதுவராக ஸ்கேட்டிங் வீராங்கனை மெரிலின் தனம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
20 வயது வீராங்கனை மொ்லின் தனம், 2024 மக்களவைத் தோ்தலின்போது தோ்தல் துறையின் தூதுவராகவும், இப்போது சட்டப்பேரவை தோ்தலிலும் தோ்தல் துறை தூதுவராகவும் மொ்லின் தனம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் 19 பதக்கங்களையும், மாநில அளவில் 18 பதக்கங்களையும் வென்றாா். இந்த விளையாட்டில் 8 வயது முதல் ஈடுபட்டு வருகிறாா் மொ்லின்.
கடந்த மக்களவைத் தோ்தலின்போதுதான், முதன் முறை வாக்காளராக அவா் வாக்கைப் பதிவு செய்துள்ளாா். இனிமேல்தான் தோ்தல் துறை இவருடைய பங்களிப்பை இத் தோ்தலில் பயன்படுத்தும் என்றும் அவா் சொல்கிறாா்.
விளையாட்டுத் துறையில் புதிதாக அமையும் அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, தேசிய அளவிலான போட்டி உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் பங்கேற்க புதுச்சேரி அரசு ரூ.3 லட்சத்தை எனக்கு அளித்துள்ளது.
புதுச்சேரியில் பல்வேறு விளையாட்டுகளுக்கு போதுமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றாா்.