முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தீவிபத்து: ரூ.4 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் மற்றும் ரீசார்ஜ் கார்டுகள் எரிந்து சேதம்

சிதம்பரம் சபாநாயகர்தெருவில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான பி.எஸ்.எம்.கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் ஏர்டெல் செல்போன் ஏஜென்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:19 AM
பகிர்:

சிதம்பரத்தில் இன்று அதிகாலை கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் மற்றும் ரீசார்ஜ் கார்டுகள் எரிந்து சேதமடைந்தன.

சிதம்பரம் சபாநாயகர்தெருவில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான பி.எஸ்.எம்.கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் ஏர்டெல் செல்போன் ஏஜென்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் மாடியில் இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென தீப்பிடித்துள்ளது. தகவல் அறிந்த சிதம்பரம் தீணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்தில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 6 கம்ப்யூட்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள், நாற்காலிகள், ரூ.2லட்சம் மதிப்புள்ள ஏர்டெல் செல்போன் ரீசார்ஜ், ஏர்டெல் டிடிஹெச் ரீசார்ஜ் உள்ளிட்டவை எரிந்து சேதமுற்றன. தீ விபத்து குறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →