முகப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கணவர் சாவு: மனைவி படுகாயம்

குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55). இவர் தனது மனைவி புஷ்பவள்ளியுடன் (44) மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அருகே உள்ள மஞ்சக்குழி கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளார். அப்போது மஞ்சக்குழி பஸ் நிறுத்தம் அருகே எதிர்புறம் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதிவிட்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

சிதம்பரம் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கணவர் இறந்தார். மனைவி படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55). இவர் தனது மனைவி புஷ்பவள்ளியுடன் (44) மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அருகே உள்ள மஞ்சக்குழி கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளார். அப்போது மஞ்சக்குழி பஸ் நிறுத்தம் அருகே எதிர்புறம் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதிவிட்டு தலைமறைவானது. இவ்விபத்தில் கிருஷ்ணமூர்த்தி, புஷ்பவள்ளி ஆகிய இருவரும் படுகாயமுற்று சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பினனர் கிருஷ்ணமூர்த்தி மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →