நாய்க்கு மலர் கொடுத்து காதலர் தின எதிர்ப்பு
சிதம்பரத்தில் பாரதிய யுவ பரிஷத் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை காதலர் தினத்தை முன்னிட்டு நாய்க்கு மலர் கொத்து கொடுத்து கலாசார சீர்கேடு தினமாக கொண்டாடினர்.
சிதம்பரத்தில் பாரதிய யுவ பரிஷத் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை காதலர் தினத்தை முன்னிட்டு நாய்க்கு மலர் கொத்து கொடுத்து கலாசார சீர்கேடு தினமாக கொண்டாடினர்.
சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் பாரதிய யுவ பரிஷத் அமைப்பு தலைவர் ரவி, துணைத் தலைவர் சிலம்பரசன், நிர்வாகிகள் பார்த்தீபன், குமராட்சி திலீப், பாம்பே தண்டபாணி, இந்துநாதன், சரவணன், பன்னீர், பாண்டியன், ஒயிட் கென்னடி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மேற்கத்திய கலாச்சாரத்தில் மயங்காதே, பெற்றோரை மறக்காதே என கோஷங்களுடன் நாய்க்கு மலர் கொத்து கொடுத்து காதலர் தினத்தை, கலாச்சார சீர்கேடு தினமாக கொண்டாடினர்.