விநோதினிக்கு சிதம்பரம் பல்கலை மாணவியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!
ஆசிட் வீசப்பட்டு இறந்த காரைக்கால் மாணவி விநோதினிக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவியர்கள் மெழுகுவர்த்தி எந்தி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
ஆசிட் வீசப்பட்டு இறந்த காரைக்கால் மாணவி விநோதினிக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவியர்கள் மெழுகுவர்த்தி எந்தி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
ஆசீட் வீசப்பட்டதால் இறந்த காரைக்கால் மாணவி விநோதனிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எரித்தும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து பொறியியல் புல வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கல்லூரி முன்பு மாணவியர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவி விநோதினியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.