முகப்பு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: ராமதாஸ் கண்டனம்

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50-ம் , டீசல் விலையை லிட்டருக்கு 50பைசாவும் உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களின் நலனில் தங்களுக்கு எந்தஅக்கறையும் இல்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறைநிரூபித்திருக்கிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50-ம் , டீசல் விலையை லிட்டருக்கு 50பைசாவும் உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களின் நலனில் தங்களுக்கு எந்தஅக்கறையும் இல்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறைநிரூபித்திருக்கிறது.மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் உயர்ந்துவிட்டன.

இந்த விலை உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஒரு மாதத்துக்குள் இரண்டாவது முறையாக டீசல் விலையை உயர்த்தி மக்களின் மீது தாங்க முடியாத சுமையை மத்திய அரசு சுமத்தியிருக்கிறது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக  கலால்வரிக் குறைப்பு, சுங்க வரிக்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசுஎடுத்திருக்கவேண்டும்.  அதை விடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்வை மக்களின் தலையில் சுமத்துவது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →