முகப்பு
தற்போதைய செய்திகள்

பங்களிப்பு ஓய்வூதிய தொகைக்கு (CPS) 8.6% வட்டி வழங்க அரசு ஆணை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் தொகைக்கு 8.6 சதவீத வட்டி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:29 AM
பகிர்:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் தொகைக்கு 8.6 சதவீத வட்டி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு முதல் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் படி மாதம் தோறும் அரசு ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.அது போல் அரசும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும். இப்படி செலுத்தப்படும தொகைக்கு வட்டி வீதத்தினை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள ஆணையில்(38) கூறியிருப்பதாவது: ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 1-4-2003 முதல் 30-11-2011 வரை 8 சதவீத வட்டியும்,1-12-2011 முதல் பங்களிப்பு தொகைக்கு 8.6 சதவீத வட்டியும் வழங்கப்படும்.இவ்வாறு அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →