முகப்பு
தற்போதைய செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததற்கு ஜெயலலிதாவே காரணம்: விஜயகாந்த்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததற்கு ஜெயலலிதாவே காரணம் என்று பேசினார் தேமுதிக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:33 AM
பகிர்:

காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததற்கு ஜெயலலிதாவே காரணம் என்று பேசினார் தேமுதிக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்.

திருக்கோவிலூர் அருகே வேம்பூர் ஊராட்சி கொட்டாமேடு கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி ராஜீவ்காந்தி-சத்யா ஆகியோர் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து விஜயகாந்த் பேசியபோது...

* தேர்தல் வாக்குறுதியில் கரும்பு டன்னுக்கு ரூ.2,500 வழங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், கொடுத்த வாக்குறுதியை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.

* தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்

* புதிதாக வரும் கட்சிகளே நாட்டை ஆளவேண்டும்.

* காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததற்கு ஜெயலலிதாவே காரணம்

* எம்.ஜி.ஆர். கருணாநிதி ஆகியோரின் ஆட்சியில் காவிரிப் பிரச்னை இந்த அளவுக்கு வந்ததில்லை.

* நாடே லஞ்சத்தில் உழல்கிறது

* காவல்துறை நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்; காவல்துறை கடமையை மட்டுமே செய்ய வேண்டும்

* இலவசங்களைக் கொடுத்து டாஸ்மாக் பணத்தைப் பெற்று, மக்கள் பணத்தைச் சுரண்டுகிறது அரசு.

- இவ்வாறு பேசினார் விஜயகாந்த்.

முழு கட்டுரையைப் படிக்க →