திருமணம் ஆக 8 நாளே இருந்த நிலையில் கிணற்றில் இளம்பெண்ணின் சடலம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த சுகன்யா(18) என்ற பெண்ணிற்கு திருமணம் ஆக எட்டே நாள் இருந்த நிலையில் வியாழக்கிழமை அவரது சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் கைப்பற்றப்பட்டது.
தற்போதைய செய்திகள்திருமணம் ஆக 8 நாளே இருந்த நிலையில் கிணற்றில் இளம்பெண்ணின் சடலம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த சுகன்யா(18) என்ற பெண்ணிற்கு திருமணம் ஆக எட்டே நாள் இருந்த நிலையில் வியாழக்கிழமை அவரது சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் கைப்பற்றப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த சுகன்யா(18) என்ற பெண்ணிற்கு திருமணம் ஆக எட்டே நாள் இருந்த நிலையில் வியாழக்கிழமை அவரது சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் கைப்பற்றப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் சுகன்யாó. இவருக்கும் இவரது உறவினர் மகனுக்கும் வருகின்ற மார்ச்-8ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை பூச்செடியில் பூப்பறிக்க சென்ற சுகன்யா வீடு திரும்பாத நிலையில் அவரை பல இடங்களில் தேடிய நிலையில் அங்கிருந்த ஒரு கிணற்றில் பிணமாக இவர் கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து பாதிரிவேடு போலீஸார் விரைந்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.
திருமணம் ஆக 8நாட்களே இருந்த நிலையில் சுகன்யா கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதால், இவர் கிணற்றில் தவறி விழுந்தாரா, அல்லது திருமணம் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து பாதிரிவேடு போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதி முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.