அரசு கேபிள் டி.வி., தாசில்தாருக்கு அரிவாள் வெட்டு
தேனியில் அரசு கேபிள் டி.வி.,யின் தாசில்தாரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:34 PM
தேனியில் அரசு கேபிள் டி.வி.,யின் தாசில்தாரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், அரசு கேபிள் டி.வி.,யின் தாசில்தாரராக பணியாற்றி வருபவர் முருகேசன். இவர் வழக்கம் போல் இன்று அலுவலக பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த கடமலைகுண்டு பகுதியைச் சேர்ந்த கேபிள் டி.வி., ஆப்ரேட்டர் வேல்முருகன் என்பவர் தாசில்தாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். வெட்டுபட்ட தாசில்தார் முருகேசன் உடனே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தப்பியோடிய வேல்முருகனை தேடி வருகின்றனர்.
Advertisement