திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் மூழ்கி மாணவன் பலி
மதுரை, திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை குளத்தில் மூழ்கி, ப்ளஸ் டூ மாணவர் பலியானார்.
மதுரை, திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை குளத்தில் மூழ்கி, ப்ளஸ் டூ மாணவர் பலியானார்.
மதுரை பழங்கானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ் எனபவரின் மகன் வெங்கடேஷ் (17). ப்ளஸ் டூ மாணவரான இவர், தன் நண்பனான வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த கணேஷுடன் சரவணப் பொய்கையில் குளிப்பதற்காக வந்தவர்கள் குளத்தின் ஆழப் பகுதிக்குச் சென்றுவிட்டனர். அப்போது இருவரும் உயிருக்குப் போராடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து, கணேஷை மட்டும் காப்பாற்றினர். வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.