அண்ணாமலைப் பல்கலை. எம்ஏ அப்ளைடு எக்கானிமிக்ஸ் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, மறியல்
தமிழ்நாடு அரசு தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக முதல்வரிடம் ஆணையை பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ அப்ளைடு எக்கானிமிக்ஸ் பயின்ற
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் எம்ஏ அப்ளைடு எக்கானிமிக்ஸ் பயின்ற மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக முதல்வரிடம் ஆணையை பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ அப்ளைடு எக்கானிமிக்ஸ் பயின்ற 4 பேருக்கு தகுதியில்லை என பணி நியமனம் வழங்க மறுத்ததை கண்டித்தும், எம்ஏ அப்ளைடு எக்கானிமிக்ஸ் பயின்றவர்களுக்கு தகுதி உண்டு என்ற அரசாணை வழங்க வேண்டும். என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் மாணவ, மாணவியர்கள் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்கள் பின்னர் துணைவேந்தரை சந்தித்து முறையிட கலைந்து சென்றனர்.