விஸ்வரூபம்: பாதியில் நிறுத்தம்; ரசிகர்கள் சாலைமறியல்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கலைவாணி திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கலைவாணி திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி உடனே நிறுத்தும்படி கட்டளை வந்ததால், படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகள் பெரும் கோபம் அடைந்து பிரச்னையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்பட்டது. இருப்பினும் பத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் சாலையில் அமர்ந்து நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.