இளவரசன் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம்: போக்குவரத்து நிறுத்தம்
தருமபுரியில் இன்று மர்மமான முறையில் உயிரிழ்ந்து சடலமாகக் கிடந்த இளவரசன் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரியில் இன்று மர்மமான முறையில் உயிரிழ்ந்து சடலமாகக் கிடந்த இளவரசன் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பக் கூடாது என்றும், தங்கள் பகுதியான நத்தம் காலனிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வற்புறுத்திய அவர்கள், போலீஸாரை அருகே விடவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே, பதற்றமான சூழ்நிலை கருதி, கிராமப் பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.