இளவரசன் உடல் பிரேதப் பரிசோதனைக்கு வழக்குரைஞர்கள் எதிர்ப்பு
நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த இளவரசனின் உடல் இன்று காலை 7 மணி அளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,
நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த இளவரசனின் உடல் இன்று காலை 7 மணி அளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவக் குழுவினரும் வந்தனர். ஆனால், வழக்குரைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கே பரபரப்பு எழுந்தது. பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஆகியுள்ளது. பாதுகாப்பு கருதி போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.