இளவரசன் வழக்கு காவல்துறைக்கு மாற்றம் : மக்கள் எதிர்ப்பு
தருமபுரியில், ரயில் தண்டவாளம் அருகே இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கு விசாரணை காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தருமபுரியில், ரயில் தண்டவாளம் அருகே இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கு விசாரணை காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இளவரசன் மரணம் குறித்து ரயில்வே போலீசார் இதுவரை விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணை காவல்துறை எஸ்.பி. ராமானுஜத்தின் உத்தரவின் பேரில் தருமபுரி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
மேலும், எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் அரூர் டிஎஸ்பி சம்பத் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பத்குமார் தலித் மக்களுக்கு எதிரானவர். அவர் மீது தலித்களுக்கு எதிராக செயல்பட்டதாக ஏற்கனவே நிறைய புகார்கள் இருக்கின்றன. இந்த நிலையில், அவர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.