பிரேத பரிசோதனையில் முரண்பாடு : இளவரசனின் உடலை வாங்க மறுப்பு
தருமபுரியில் மரணம் அடைந்த இளவரசனின் பிரேத பரிசோதனையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
தருமபுரியில் மரணம் அடைந்த இளவரசனின் பிரேத பரிசோதனையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
பிரேத பரிசோதனை செய்த மருத்துவக் குழுவில் மூன்று பேர் இருந்தனர். அதில் இரண்டு மருத்துவர்கள் தகுதி இல்லாத மருத்துவர்கள் என்று கூறி, இளவரசனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
மேலும், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் போவதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.