முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமதாஸ், திவ்யாவின் தாய் உள்ளிட்டோர் மீது இளவரசனின் தந்தை புகார்

இளவரசனின் மரணத்துக்கு, பாமக தலைவர் ராமதாஸ், திவ்யாவின் தாய் தேன்மொழி உள்ளிட்டோரே காரணம் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:40 PM
பகிர்:

இளவரசனின் மரணத்துக்கு, பாமக தலைவர் ராமதாஸ், திவ்யாவின் தாய் தேன்மொழி உள்ளிட்டோரே காரணம் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தருமபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசனின் அப்பா, காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், தன்  மகன் தற்கொலையோ, கொலையோ செய்யப்பட்டு உயிரிழந்துவிட்டார். அவரது மரணத்துக்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தருமபுரி முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், மாநிலத் துணைச் செயலாளர் சரவணன், திவ்யாவின் அம்மா தேன்மொழி, அவர்களது வழக்குரைஞர் பாலு, செல்லன்கோட்டாய் பகுதியைச் சேர்ந்த ராஜா, முருகேசன் ஆகியோர் தான். இந்த புகாரை பதிவு செய்து, எப்ஐ ஆர் நகலைக் கொடுக்குமாறு காவல்நிலையத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தருமபுரி மாவட்ட நிர்வாகத்திடம் இளவரசன் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →