முகப்பு
தற்போதைய செய்திகள்

எம்பிபிஎஸ் சீட்டு வாங்கித் தருவதாக மோசடி: ஐஏஎஸ் அதிகாரி என ஏமாற்றிய நபர் கைது

மதுரை சோழவந்தானைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (33). இவர் தூத்துக்குடி பகுதியில், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லியுள்ளார். மேலும், இரு நபர்களிடம் மருத்துவப் படிப்புக்கான சீ

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:41 PM
பகிர்:

மதுரை சோழவந்தானைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (33). இவர் தூத்துக்குடி பகுதியில், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லியுள்ளார். மேலும், இரு நபர்களிடம் மருத்துவப் படிப்புக்கான சீட் பெற்றுத் தருவதாகக் கூறி, தலா ரூ. 17 லட்சம் என ரூ. 34 லட்சம் மோசடி செய்தாராம். இது குறித்து, பாதிக்கப்பட்ட இருவர் செந்தில் குமார் மீது புகார் அளித்தனர். அவரும் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாட தூத்துக்குடிக்கு வந்த செந்தில்குமாரை, பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்ததில், அவர் போலி ஐ.ஏ.எஸ். என்றும், ஏமாற்றியதும் தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டு, மேலும் யாராவது ஏமாந்துள்ளார்களா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.