முகப்பு
தற்போதைய செய்திகள்

நீதியரசர் சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க இளவரசன் பெற்றோர்கள் எதிர்ப்பு

தருமபுரியில் திவ்யாவை கலப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் இளவசரன், மரணம் அடைந்ததில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் முறையிட்டதை அடுத்து, அவரது மரணம் குறித்து விசாரணை

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:42 PM
பகிர்:

தருமபுரியில் திவ்யாவை கலப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் இளவசரன், மரணம் அடைந்ததில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் முறையிட்டதை அடுத்து, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிங்காரவேலு தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நீதியரசர் சிங்காரவேலு தலைமையில் ஆணையம் அமைப்பதற்கு இளவரசன் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதியரசர் சிங்காரவேலு தலித் இனத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு உண்டு.எனவே அவருக்கு பதிலாக ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →