போலீஸ் விசாரணைக்கு இளவரசன் பெற்றோர்கள் ஒத்துழைக்க மறுப்பு
கலப்பு திருமணம் செய்த இளவரசன் கடந்த 4–ம் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகே ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
கலப்பு திருமணம் செய்த இளவரசன் கடந்த 4–ம் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகே ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இளவரன் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொள்ள அரூர் டி.எஸ்.பி. சம்பத், தர்மபுரி அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்திற்கு வந்தார்.ஆனால் இளவரசன் பெற்றோர்கள் அவரது விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தனர். இந்த வழக்கை அரூர் டி.எஸ்.பி.சம்பத் விசாரிப்பதற்கு இளவரசன் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.