ரூ.5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
திருக்கோவிலூரை அடுத்த முகையூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் நடராஜன். அதே பகுதியை சேர்ந்த துரை என்பவர் வாரிசு சான்றிதல் வேண்டி அவரிடம் சென்றுள்ளார். சான்றிதல்
திருக்கோவிலூரை அடுத்த முகையூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் நடராஜன். அதே பகுதியை சேர்ந்த துரை என்பவர் வாரிசு சான்றிதல் வேண்டி அவரிடம் சென்றுள்ளார். சான்றிதல் கொடுக்க நடராஜன் ரூ.5000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத துரை இது குறீத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.இதையடுத்து துரை கிராம அதிகாரி நடராஜனிடம் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.