சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த மயில்!
புவனகிரியில் மின்சாரம் தாக்கி மயில் ஒன்று அடிபட்டு கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து வனவர் பி.மணி, வணக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் விரைந்து
சிதம்பரம் அருகே புவனகிரியில் மின்சாரம் தாக்கி மயில் ஒன்று இன்று இறந்தது.
புவனகிரியில் மின்சாரம் தாக்கி மயில் ஒன்று அடிபட்டு கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து வனவர் பி.மணி, வணக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் விரைந்து சென்று மயிலை மீட்டு புவனகிரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் எம்.எஸ்.சக்திவேல் மயிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மயில் இறந்தது. பின்னர் வனத்துறையினர் கால்நடை மருத்துவமனையில் மயிலின் உடலை பிரேத பரிசோதனை செய்து புவனகிரி வெள்ளாற்றங்கரையில் புதைத்தனர்.