முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் சுவாமி தரிசனம்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் இன்று சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருதை தந்தார். கிழக்கு கோபுர வாயிலில் அவரை நடராஜர் கோயில் செயலாளர் எம்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:44 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் இன்று வருகை தந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் இன்று சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருதை தந்தார். கிழக்கு கோபுர வாயிலில் அவரை நடராஜர் கோயில் செயலாளர் எம்.காசிராஜதீட்சிதர் தலைமையிலான பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோயிலில் நடைபெற்ற மரகத நடராஜரான ரத்தினசபாபதி தீபாரதானையும், உச்சிகாலபூஜையினை அவர் பார்த்து தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் சித்சபை மீது ஏறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ஸ்ரீநடராஜமூர்த்தியை தரிசனம் செய்தார். பொதுதீட்சிதர்கள் சிறப்பு தீபாராதனை செய்து நீதிபதிக்கு பட்டு போர்த்தி பிரசாதத்தை வழங்கினர். பின்னர் அவர் தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். கோயிலுக்கு வந்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஆர்.ராதிகா, வட்டாட்சியர் எம்.விஜயா, சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், கோயில் செயல்அலுவலர் கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →