இளவரசன் சடலம் மறு ஆய்வு: மருத்துவர்கள் விசாரணை
தருமபுரியில் இளவரசன் சடலத்தை மருத்துவர்கள் குழு இன்று மறு ஆய்வு செய்தது.
தருமபுரியில் இளவரசன் சடலத்தை மருத்துவர்கள் குழு இன்று மறு ஆய்வு செய்தது.
உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி, இன்று காலை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த இரு மருத்துவர்களைக் கொண்ட குழு, இளவரசன் உடலை மறு ஆய்வு செய்தது.
பின்னர் அவர்கள் இருவரும், இளவரசன் சடலமாக மீட்கப்பட்ட ரயில் தண்டவாளப் பகுதிக்குச் சென்று, இளவரசன் எந்த வேகத்தில் விழுந்திருப்பார். மூளை சிதைவுகள் எப்படி இருந்தன என்பது குறித்து ஆய்வு செய்து, இது குறித்து இளவரசன் தந்தையிடமும் விசாரித்தார்கள். இளவரசன் ஏன் இந்த இடத்துக்கு வந்தான் என்பது குறித்து கேட்டனர். அதற்கு அவர், வழக்கமாக இளவரசன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இடம்தான் என்றார். பின்னர் அவர்கள் உறவினர்களிடம் இறப்பதற்கு முன் ஏதாவது பேசினானா என்பது குறித்தும் விசாரித்தனர்
பலத்த பாதுகாப்புடன் வந்த இருவரும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இன்று இரவுக்குள் அறிக்கை தயார் செய்து கொடுத்து விடுவோம் என்றனர்.