தருமபுரி அருகே யானை மிதித்து ஒருவர் பலி
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிக்லிபெரியூர் கிராமத்தில் யானை மிதித்து ஒருவர் பலியானார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிக்லிபெரியூர் கிராமத்தில் யானை மிதித்து ஒருவர் பலியானார்.
சின்னபெரியசாமி (54) என்பவர் கம்புக்காடுக்கு காவல் இருந்தார். நேற்று நள்ளிரவு ஒரு யானை அவரை மிதித்ததில் அவர் உயிரிழந்தார். அவரது மனைவி சிங்கம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.