தற்போதைய செய்திகள்

பிரவசத்துக்குப் பின் தாய், குழந்தை மரணம்: மருத்துவமனை ஊழியர் 3 பேர் மீது வழக்கு

மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ஈச்சமுத்து.இவரது மனைவி முத்துமாரி (29). கர்ப்பிணியான இவரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில்

ஜெயப்பாண்டி

மதுரையில் பிரசவத்திற்குப் பின்னர் தாய், குழந்தை மரணமடைந்ததை அடுத்து தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ஈச்சமுத்து.இவரது மனைவி முத்துமாரி (29). கர்ப்பிணியான இவரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தை நீண்டநேரமாகியும் அழுகாமல் இருந்ததால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்துவிட்டது. மேலும், ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் முத்துமாரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தாலே தாய், குழந்தை இறந்ததாக ஈச்சமுத்து குடும்பத்தினர் புகார் கூறினர். இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது.அதன்படி தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மேரி, தனம் மற்றும் ராமசாமி ஆகியோர் மீது அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT