பரங்கிப்பேட்டை சிறைச்சாலையில் போலீஸ்காரர் மாரடைப்பில் மரணம்
சிதம்பரம் அண்ணாமலைநகரைச் சேர்ந்த ராமதாஸ் (54). இவர் பரங்கிப்பேட்டை கிளை சிறைச்சாலையில் முதுநிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பாரா பணியில் இருந்த இவருக்கு திடீரென
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை சிறைச்சாலையில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பில் மரணமடைந்தார்.
சிதம்பரம் அண்ணாமலைநகரைச் சேர்ந்த ராமதாஸ் (54). இவர் பரங்கிப்பேட்டை கிளை சிறைச்சாலையில் முதுநிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பாரா பணியில் இருந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.