முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் தேமுதிகவினர் சாலைமறியல்: 10 பெண்கள் உள்ளிட்ட 95 பேர் கைது

சிதம்பரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 10 பெண்கள் உள்ளிட்ட 95 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:51 PM
பகிர்:

சிதம்பரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 10 பெண்கள் உள்ளிட்ட 95 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு பொய்யான வழக்குகளை போடுவதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து வியாழக்கிழமை சிதம்பரம் சபாநாயகர்தெருவில் மாவட்டச் செயலாளர் சபா.சசிகுமார் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் நகரச் செயலாளர் சி.க.விஜயகுமார், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆர்.பாலு, ஆர்.பி.ராஜா, திருஞானசம்பந்தம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தமிழரசன், முகமது ஐயூப், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் ஆர்.உமாநாத், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயமணிகண்டதேவன், சீனுசங்கர், ராஜவேல்,பானுசந்தர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 95 பேரை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் கைது செய்தார். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.