இளம் மனைவியை தீயிட்டுக் கொன்றதாக கணவர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே சேகல்மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (28). விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு தங்கம் (20) என்பவருடன் மூன்றாண்டுகளுக்கு
திருத்துறைப்பூண்டி அருகே சேகல்மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (28). விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு தங்கம் (20) என்பவருடன் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த 20ம் தேதி தங்கம் தீ வைத்து எரிந்த நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவசர அவசரமாக அவரது உடலை இறுதிச் சடங்குகள் செய்து எரித்துவிட்டனர். போலீஸாருக்குச் சொல்லாமல் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு விட்டதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தங்கத்தின் தாயார் மணிமேகலை அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸார் வடிவழகனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.