முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே டிராக்டர் மோதி 5 வயது சிறுமி சாவு

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கமர்ஜமால் மகள் ரிபைனாஆஸ்ரின் (வயது.5). பின்னத்தூர் அல்அமீன் பள்ளியில் யுகேஜி படிக்கும் இச்சிறுமி இன்று பள்ளிவாசலில் கஞ்சி வாங்கிக் கொண்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:56 PM
பகிர்:

சிதம்பரம் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி இறந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கமர்ஜமால் மகள் ரிபைனாஆஸ்ரின் (வயது.5). பின்னத்தூர் அல்அமீன் பள்ளியில் யுகேஜி படிக்கும் இச்சிறுமி இன்று பள்ளிவாசலில் கஞ்சி வாங்கிக் கொண்டு சாலையோரம் சென்று கொண்டிருந்த சிறுமி மீது அவ்வழியே திருவிடைமருதூரிலிருந்து கல் ஏற்றி வந்த டிராக்டர் மோதியது. இவ்விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுமி ரிபைனா ஆஸ்ரின் இறந்தார். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →