முதலை கடித்து ஒருவர் சாவு
சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ரயிலடி பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜன் (55). விவசாய கூலித்தொழிலாளியான இவர் இன்று இயற்கை உபாதைக்கு சென்றுவிட்டு பழைய கொள்ளிடம்
சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து முதியவர் ஒருவர் இறந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ரயிலடி பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜன் (55). விவசாய கூலித்தொழிலாளியான இவர் இன்று இயற்கை உபாதைக்கு சென்றுவிட்டு பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கியுள்ளார். அப்போது முதலை கடித்து, பிடித்து நீருக்குள் இழுத்துச் சென்றது. சிறது நேரத்தில் காயங்களுடன் உடல் மிதந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.