முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவர் விஷம் அருந்தி தற்கொலை

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்  பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் பன்னீர்செல்வம். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் இவர் வீட்டில் இருந்த

தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவர் விஷம் அருந்தி தற்கொலை

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்  பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் பன்னீர்செல்வம். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் இவர் வீட்டில் இருந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:41 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதி்யை சேர்ந்த பன்னீர்செல்வம்(21) என்ற இளைஞர் பெற்றோர் திட்டியதால் விஷம் அருந்தியதில்  மரணமடைந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்  பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் பன்னீர்செல்வம். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் இவர் வீட்டில் இருந்த ரூபாய் 20ஆயிரத்தை கொடுத்து கடந்த மே-25ஆம் தேதி பழைய மோட்டார் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்து அறிந்த பன்னீர்செல்வத்தின் தந்தை ரவி குடும்ப சூழல் புரியாமல் 20ஆயிரம் கொடுத்து பைக் வாங்கி வீணடித்துள்ளாயே என்று கடிந்து பேசியிருக்கிறார்.

இதனால் மனவேதனை அடைந்த பன்னீர் செல்வம் அவர்களது பூத்தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு செடிகளுக்கு அடிக்க வைத்துள்ள பூச்சி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்று பன்னீர்செல்வம் நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு மரணமடைந்துள்ளார்.இது குறித்து பாதிரிவேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →