முகப்பு
தற்போதைய செய்திகள்

 குன்னம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு

 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:00 PM
பகிர்:

 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

   குன்னம் அருகே உள்ள சின்ன வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சிவக்குமார் (25). கூலித்தெழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் அரியலூர் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை சின்ன வெண்மணி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அரியலூர் - அகரம் சீகூர் சாலையில் மருதையான் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார், அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

  இதுகுறித்து, குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →