பன்னப்பட்டு ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி
உழவாரப்பணியை முன்னிட்டு சிவனடியார்கள் பங்கேற்ற சிவபூஜையும், திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சியும், ஸ்ரீதிரிபுரசுந்தரி சமே ஸ்ரீசோமசுந்தரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றன. அப்பர் தொண்டு நிறுவன செயலாளர் வி.சந்சிரசேகரன் தலைமையில் என்.காளிதாஸ்
சிதம்பரம் அருகே உள்ள பன்னப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயிலில் அப்பர் தொண்டு நிறுவனம் சார்பில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உழவாரப்பணியை முன்னிட்டு சிவனடியார்கள் பங்கேற்ற சிவபூஜையும், திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சியும், ஸ்ரீதிரிபுரசுந்தரி சமே ஸ்ரீசோமசுந்தரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றன. அப்பர் தொண்டு நிறுவன செயலாளர் வி.சந்சிரசேகரன் தலைமையில் என்.காளிதாஸ், ஜோதி மகாலிங்கம், ராமச்சந்திரன், நளினி, கண்ணன், மாலா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்று கோயில் வளாகம் முழுவதையும் நீரால் கழுவி சுத்தப்படுத்தியும், கோயில் பிரகாரத்தில் உள்ள முட்புதர்களை மற்றும் செடி, கொடிகளை அகற்றி உழவாரப்பணியை மேற்கொண்டனர்.