முகப்பு
தற்போதைய செய்திகள்

வேகத்தடையில் நிலைகவிழ்ந்து விவசாயி பலி

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மார்டின் (55). விவசாயியான இவருக்கு 8 குழந்தைகள் உள்ளனர். நேற்று அப்பகுதி டயசீஸ்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:02 PM
பகிர்:

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மார்டின் (55). விவசாயியான இவருக்கு 8 குழந்தைகள் உள்ளனர். நேற்று அப்பகுதி டயசீஸ் தேர்தல் (பெருமண்டல தேர்தல்) நடைபெற்ற நிலையில், அவரது ஆதரவாளர் வெற்றி பெற்றாராம். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட மது அருந்திய அவர், பின்னர் சாத்தான்குளம் நோக்கி தனது மொபட் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சாத்தான்குளம் அருகே அமுதுன்னாகுடி பகுதியில் வேகத் தடையைக் கடந்த போது, நிலை தடுமாறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் பாளையங்கோட்டை மேட்டுத்திடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments