தற்போதைய செய்திகள்

செங்கல் சூளை தொழிலாளியைக் கடத்தி மிரட்டல்: 4 பேர் கைது

மதுரையில் செங்கல் சூளை தொழிலாளியைக் கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல் சூளை அதிபரை போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

ஜெயப்பாண்டி

மதுரையில் செங்கல் சூளை தொழிலாளியைக் கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல் சூளை அதிபரை போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

தேனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், மதுரையில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்தார். இவர் முன்பணமாக ரூ.60 ஆயிரம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அங்கிருந்து விலகி, மானாமதுரையில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதை அடுத்து, நடராஜன் உள்ளிட்டோர் மானாமதுரைக்குச் சென்று அவரைக் கடத்தி வந்து பணம் தருமாறு மிரட்டினராம்.

இது தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில், மதுரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, குமார் அர்ஜுனன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். நடராஜனைத் தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT