தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மர்மமான முறையில் 15 தெருநாய்கள் திடீர் சாவு

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ளது கூத்தியார்குண்டு கிராமம். இப்பகுதியில் தெருநாய்கள் அதிகம் சுற்றித் திரிந்து வந்தது. இந்நிலையில் கூரைக்குண்டு காட்டுப்பகுதியிலும், சாலையோரத்திலும் 15

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மர்மமான முறையில் 15 நாய்கள் உயிரிழந்தது குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ளது கூத்தியார்குண்டு கிராமம். இப்பகுதியில் தெருநாய்கள் அதிகம் சுற்றித் திரிந்து வந்தது. இந்நிலையில் கூரைக்குண்டு காட்டுப்பகுதியிலும், சாலையோரத்திலும் 15 நாய்கள் வரையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ளவர்கள் விலங்கின ஆர்வலர்களான சுனிதா கிறிஸ்டி மற்றும் முருகன் உள்ளிட்டோரிடம் தெரிவித்தனர். அதையடுத்து, உடனே கிராமத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தனர்.

அப்போது, நாய்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் உணவில் விஷம் வைத்து கொண்றிருக்கலாம் என தெரிய வந்தது. இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் விலங்கின ஆர்வலர் முருகன் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நாய்களுக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT