சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நூறாவது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திருவள்ளுவர் மாவட்டம் நரசிங்கபுரம் வள்ளலார் வழிபாட்டு மன்ற ஆன்ம நேயக்குழுத்தினரின் நூறாவது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும், குருநாதர் திருவேங்கட சுவாமிகளின்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திருவள்ளுவர் மாவட்டம் நரசிங்கபுரம் வள்ளலார் வழிபாட்டு மன்ற ஆன்ம நேயக்குழுத்தினரின் நூறாவது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும், குருநாதர் திருவேங்கட சுவாமிகளின் நூறாவது ஆண்டு மங்கல விழா இன்று நடைபெற்றது.
வள்ளலார் வழிபாட்டு குழுவினர் கடந்த ஜூன் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை பேரம்பாக்கம் வள்ளலார் கோயிலிலிருந்து பேருந்தில் புறப்பட்டு நெய்வேலி நடராஜர் கோயில், வடலூர், மேட்டுக்குப்பம், திருமுதுகன்றம், ராஜேந்திரபட்டினம், சோழத்தரம், கங்கை கொண்ட சோழபுரம், திருநாரையூர், கானாட்டுமுள்ளூர், மேலக்கடம்பூர், காட்டுமன்னார்கோயில், ஓமாம்புலியூர், திருக்கழிப்பாலை, திருவேட்களம், நல்லூர் பெருமணம் ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று சனிக்கிழமை இரவு வந்தடைந்தனர்.
சிதம்பரத்தில் வழிபாட்டுக்குழுவின் சிவனடியார்கள் இன்றூ காலை திருமுறைகளை தலையில் சுமந்து வீதிவலம் வந்தனர். பின்னர் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாசக முற்றோதல் செய்தனர். நடனப்பந்தலில் நூறு வயது பூர்த்தியடைந்த திருவேடங்கடசுவாமிகளுக்கு கனகாபிஷேகம் நடைபெற்றது. உ.கேதாரேஸ்வர தீட்சிதர் கனகாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பின்னர் மாகேஸ்வரபூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.எம்.டி.பிரம்மேச சிவாச்சாரியார், திருவையாறு வே.ரமணன், காஞ்சிபுரம் டாக்டர் வே.சந்திரசேகரன், காஞ்சி சிவனடியார் திருக்கூட்டச் செயலாளர் ஆ.பாலசுப்பிரமணியன், க.கன்னியப்பனார், கூவம் நால்வர் இறைபணி சங்கத் தலைவர் ச.மணிவாசகம், பி.கே.பக்தவச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.