மூதாட்டி கொலை:பெண் கைது
திருநகரில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் போலீசார் உறவுப்பெண்ணை திருநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநகரில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் போலீசார் உறவுப்பெண்ணை திருநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநகர் ஜோசப் நகரை 3 வது தெருவை சேர்ந்தவர் முத்துபிள்ளை(65) கணவரை பிரிந்து தனித்து வாழும் இவர் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கிய அறிகுறி காணப்பட்டது.இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில் முத்துப்பிள்ளையின் தங்கை மகள் ராஜேஸ்வரி(31) கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கொலை குறித்து போலீசார் தெரிவிக்கையில்:கொலை செய்யப்பட்ட முத்துப்பிள்ளையின் தங்கை மகள் ராஜேஸ்வரி அப்பகுதியிலேயே குடியிருவந்துள்ளார்.ராஜேஸ்வரியின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் வறுமையில் இருந்த ராஜேஸ்வரி பணம் நகைக்காக ஆசைப்பட்டு முத்துப்பிள்ளையை கொலை செய்திருப்பதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்றனர்.