மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு!
சிதம்பரம் சிவசக்திநகரைச் சேர்ந்த செல்லதாயி (62). இவர் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை சிதம்பரம் நகர கடைத்தெருவிற்கு பொருள்கள் வாங்கி கொண்டு வீடு திரும்பினார். அப்போது
சிதம்பரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் தாலி செயினை பறித்துச் சென்றனர்.
சிதம்பரம் சிவசக்திநகரைச் சேர்ந்த செல்லதாயி (62). இவர் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை சிதம்பரம் நகர கடைத்தெருவிற்கு பொருள்கள் வாங்கி கொண்டு வீடு திரும்பினார். அப்போது சிவசக்திநகரில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரது கழுத்திலிருந்த 6 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தலைமறைவானார்கள். இதில் கீழே விழுந்த செல்லதாயி காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.